கோவை வந்த ரயில்களில் 2 பேர் உயிரிழப்பு - ரயில் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சேந்தமங்கலத்தை சேர்ந்த காஜா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதேபோல், ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும் உயிரிந்தார்.


கோவை: கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மே.30 காலை தஞ்சாவூரிலிருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் எஸ் 11வது பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள மன்னார்குடி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த காஜா (வயது 52) என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில் கோவை அருகில் வந்த போது அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று நேற்று மே.29 இரவு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியும் கோவை அருகில் ரயில் வந்த போது திடீரென இறந்தார்.

அடுத்தடுத்து ரயிலில் வந்த பயணிகள் இறந்ததால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற பயணி கோவை ரயிலில் ஏறும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எனவே, ரயில் நிலையங்களில் டாக்டர்கள் குழு உடன் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...