சாடிவயல் பகுதியில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.