கோவை குற்றாலம் அருகே சாடிவயல் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

சாடிவயல் பகுதியில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...