கட்சி பிரதிநிதி போல மாவட்ட ஆட்சியர் பேசுவதாக மனுதாரர் புகார்!

கோவையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலால் மனு அளிக்க வந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 153 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூலடப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.



இக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுவினை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இராமநாதபுரம் 75-வது வார்டு மணிகண்டன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கோவையில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 



ஆனால், மூடப்பட்ட மதுபானக்கடைகளில் தொடர்ந்து மறைமுகமாக மது விற்பனை நடந்து வருகிறது. இராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, நஞ்சுண்டாபுரம், புளியகுளம், 80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மது விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்த போது, "மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுபானக்கடைகளை திறந்தால் தான் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்" என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 



மாவட்ட ஆட்சியரின் இந்த பதில், கட்சி பிரதிநிதி போல உள்ளது என புகார் தெரிவித்தார்.

இதேபோல ஒண்டிப்புதூர், காளப்பட்டி, ரத்தினபுரி, பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவதாக புகார் தெரிவித்த பெண்கள், மதுபானக்கடைகளினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரேநாளில் ஏராளமான பகுதி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களினால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...