கோவை மாநகரில் இந்து மத கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயலாக உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இந்து கட்சியின் சக்தி சேனா அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.

முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.
இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர்.
முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.
இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர்.
முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.