பயணச்சீட்டு கேட்ட நடத்துனருக்கு கத்திகுத்து- ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் ஆத்திரம்



பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை பிடித்த காந்திபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. இதில்  கோவை போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரன் கோவை உக்கடத்திற்கு பயணச்சீட்டை பெற்று பயணம் செய்துள்ளார்.

பின்னர் பேருந்து உக்கடம் பேருந்து நிலையம் வந்தபின்னர் நடத்துனர் பாண்டியராஜன், காவலர் சிவராமசந்திரன் வாங்கிய பயணச்சீட்டு உக்கடம் வரை மட்டுமே செல்லும் என்றும், காந்திபுரம் செல்லவேண்டுமானால் மீண்டும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு சிவராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியநிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வரும் போது கோபம் அடைந்த காவலர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியராஜன் காலில் குத்தியுள்ளார்.

இதனைக்கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் காட்டூர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த நடத்துனர் பாண்டியராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, ரயில்வே காவலர் சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...