உறுதி அளிக்கபட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி மண்பாண்ட தொழிலாலர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்து கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.



இதுகுறித்து மனு அளிக்கவந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட தொழிலில் சுமார் 40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016 பிப்ரவரி 14ம் தேதியன்று சென்னை வண்டலூரில் அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் மாநாட்டு நடைபெற்றது.

இதில், மழைக் கால பராமரிப்பு உதவி தொகை 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழில் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் தமிழக அமைச்சர்களிடம் அளிக்கபட்டது. இதில் 4 தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். 

அவர்கள் உறுதியளித்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...