தொழிலதிபர் பெரோஸ்கான் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் கணக்கில் வராத 4 கோடியே 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் இல்லத்தில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து கணக்கில் வராத ஏராளமான பணம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை நடைபெறும் வீட்டின் அருகில் தமிழக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து 4 கோடியே 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.

அவரது வீட்டில் இருந்து ஏர் கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறும் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சோதனை நடைபெறும் வீட்டின் அருகில் தமிழக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து 4 கோடியே 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.
அவரது வீட்டில் இருந்து ஏர் கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறும் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார்.