வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவன் புதுகாடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் புதுகாடு பகுதியில் குடியிருந்து வரும் சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் வயது பதினெட்டு இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் எஸ்என்எம்வி கல்லூரி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை வால்பாறை வந்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் புதுகாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார். வன பகுதியில் இருந்து வந்தஇரண்டு காட்டு யானைகள் சாலையில் நின்று உள்ளது. யானையை பார்த்து பைக் நிறுத்தி உள்ளனர். இதில் யானை இவர்களை தாக்கியது. இதில் சந்தோஷம் என்பவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். முகேஷ் என்பவரை யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவரை பொதுமக்கள் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உள்ளனர் அங்கு இவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில்

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.



கல்லூரி மாணவன் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...