உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கும், வாகனம் கொடுத்தோருக்கும் ''ரூ.500'' அபராதம்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில் பெரும்பாலான மாணவர்கள் சாலையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் புதிய சட்டம் ஒன்றினை அமல்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் கூறுகையில், "பள்ளிகளில் தேர்வுகள் முடிவுற்று தற்போது விடுமுறை நாட்கள் துவங்கியுள்ளன. இவ்விடுமுறை நாட்களில் அதிகப்படியான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களின் வாகனங்களை சாலையில் ஓட்டி வருகின்றனர். அவ்வாறாக வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் அவர்கள் ஓட்டுநர் உரிமமின்றி சாலையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் நேரிடுகிறது.

மேலும், இவ்வாறாக வாகனம் ஓட்டும் போது வாகனத்தை இயக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி இவ்விபத்தில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கூட சேதங்கள் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர்.

கோவை மாநகரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 34 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில், 3 முதல் 4 உயிரிழப்புகள் ஓட்டுநர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்களே.

இவ்வருடத்தில் தற்போது கோடை விடுமுறையினை கழிக்க மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, முறையான உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு ரூ.500 அபராதம் மற்றும் அவர்களுக்கு வாகனம் தந்த பெற்றோர், நண்பர்கள், உறவினர்களுக்கு அபராதம் ரூ.500 என வசூலிக்கப்படுகிறது.

கோவையில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுதொடர்பான 1100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தி, சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...