கோவையில் இருந்து மாதந்தோறும் 80 டன் இன்ஜினியரிங் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 டன் மற்றும் சிங்கப்பூர் விமானத்தில் 1 டன் வீதம் பயணிகளுடன், ‘பாண்டட் டிரக்' சேவை மூலம் சரக்குகளும் கொண்டு செல்லப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகளுக்கு மாதந்தோறும் 80 டன்னுக்கும் அதிகமாக வார் படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் 'பாண்டட் டிரக்' சேவை மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவை விமான நிலைய வளாகத்தில் விமான சரக்கக அலுவலகம் அமைந்துள்ளது.

கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல 'பாண்டட் டிரக்' சேவை வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு தொழில்துறை சார்ந்த பொருட்கள் தொடர்ந்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா வுக்கு வாரத்தின் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சேவை வழங்கப்படுகிறது.

ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 டன் மற்றும் சிங்கப்பூர் விமானத்தில் 1 டன் வீதம் பயணிகளுடன், சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் காய்கறி மற்றும் உணவு சார்ந்த பொருட்களே அதிகம். இதுதவிர கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம், வால்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு 'பாண்டட் டிரக்' சேவை உதவுகிறது.

கோவையில் இருந்து சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 80 டன்னுக்கும் அதிகமான பொருட்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘பாண்டட் டிரக்’ சேவை கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகம் இல்லாத காரணத்தால், டிரக் வசதி உடன் கோவை விமான சரக்கக அலுவலகத்தில் பல்வேறு பொருட்கள் புக்கிங் செய்யப்படும். இவை கோவையில் இருந்து சாலை வழியாக கொச்சி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, எமிரேட்ஸ், லுப்தான்ஸா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் மூலம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கோவையில் இந்த சேவை நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...