பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில் கலைஞரின் படத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் மரியாதை

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜூன்.3 நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி,புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன், 52 வது வார்டு செயலாளர் கி.நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி, 52 வது வார்டு அவைத்தலைவர் பொ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், சி.டி.சி.நடராஜ், எஸ்.ரங்கதுரை, பாலச்சந்திரன், வார்டு பிரதிநிதி ஆட்டோ வாசு, கிரீன்வே சுப்பிரமணியம், மனோகரன், அருள்மிகு ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி.ஆர்.வெங்கடேஷ், கோகுல், கங்கை ரவி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...