சோமையம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது

சம்சாத் என்பவரின் வீட்டில் புகுந்து செல்போனை திருடிச்சென்ற கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்சாத்(21) என்பவர் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் சம்சாத் வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

அப்போது நைசாக உள்ளே நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சம்சாத் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், செல்போனை திருடியது கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த தனியார் ஊழியர்கள் ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் நேற்று ஜூன்.2 கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...