சோமையம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது

சம்சாத் என்பவரின் வீட்டில் புகுந்து செல்போனை திருடிச்சென்ற கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்சாத்(21) என்பவர் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் சம்சாத் வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

அப்போது நைசாக உள்ளே நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சம்சாத் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், செல்போனை திருடியது கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த தனியார் ஊழியர்கள் ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் நேற்று ஜூன்.2 கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...