மூளைச் சாவு அடைந்த திருப்பூர் தொழிலாளியின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானம்

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.


கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) திருமணமான இவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 2ம் தேதி இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாரின் சம்மதத்துடன் சுரேஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற மருத்துவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து மயக்கவியல் நிபுணர்கள் கல்யாண சுந்தரம், சண்முகவேல், நர்மதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் உறுப்பு தான சிகிச்சையை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சுரேஷ்குமாரின்கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்த சுரேஷ்குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவ பணியாளர்கள் நேற்று ஜூன்.4 மரியாதை செலுத்தி திருப்பூர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...