கோவையில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே பாதுகாப்புப்படை காவலரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு


பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்த பேருந்தில் நடத்துனருக்கும், போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரனுக்கும் பயணச்சீட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் பாண்டியராஜனின் காலில் ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரனை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...