பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்த பேருந்தில் நடத்துனருக்கும், போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரனுக்கும் பயணச்சீட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் பாண்டியராஜனின் காலில் ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரனை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.