கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்கள் கொள்ளையடித்த 3 பேர் கைது


கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ராஜவீதி பகுதியில் செயல்பட்டு வந்த சித்தி என்னும் நகைக்கடையில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று கத்தி முனையில் 4.25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே நகைக்கடையில் வேலை செய்து வந்த ரியாசுதீன் என்பவர் தனது நண்பர்கள் அசாருதீன் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் வாகன தனிக்கையின் போது கர்னாடகாவிற்கு பேருந்து மூலம் தப்பிச் செல்ல முயன்ற மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...