வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் உள்ள 5,361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 6 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 தொழில் முறை பாடப் பிரிவுகளில் உள்ள 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளம் அறிவியல் (வேளாண்மை), இளம் அறிவியல் (தோட்டக்கலை) படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதற்காக கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்காக மொத்தம் 26,357 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களில் 16,289 பேர் மாணவிகள். 10,068 பேர் மாணவர்கள். அதேபோல பட்டயப் படிப்புக்கு 2,428 பேர் விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...