உடுமலை, மடத்துக்குளத்தில் கனமழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் இப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.



பொதுமக்கள் கூறும் பொழுது, தற்பொழுது மடத்துக்குளம் பகுதியில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகின்றது. கோவை-திண்டுக்கல் தேசிய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் விரிவு படுத்தாத நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...