உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், தடையினை மீறி பயன்படுத்தும் போது பறிமுதல் செய்வதோடும் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பான கடைகள், தர்பூசணி பழக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம், ஐஸ் க்ரீம் கடைகள் மற்றும் சாலையோர மாலை நேர சிற்றுண்டி கடைகள் நடத்தும் உணவு வணிகர்களிடம் பாதுகாப்பான குடிநீர், செயற்கை நிறமி இல்லாத உணவு பொருட்கள், ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துதல் கூடாது என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் புகார்களை 0422- 2220922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமண அலுவலர் தெரிவித்துள்ளார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...