உடுமலை அருகே கொடுங்கியம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பொன்னர் சங்கர் கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி

கொடுங்கியம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுங்கியம் கிராமத்தில் பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம், குன்னுடையாசாமி-தாமரை அரியநாச்சி பிறப்பு, தாமரை அரியநாச்சி பூப்பு நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதைத் தொடர்ந்து நேற்றிரவு இரவு அருள்மிகு பொன்னர் சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் தொடக்கமாக மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ஹோமமும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.



கதைப்பாடல் வழியாக இந்த திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன் மற்றும் சிவா குழுவினர் தத்ரூபமாக நடத்தினர்.

தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...