பிஎன் புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கணபதி ராஜ்குமாரை திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட PN புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், மாவட்ட பொருளாளர் SM முருகன், வடவள்ளி பகுதி கழக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழக செயலாளர் பரணி க.பாக்யராஜ், DMK ITWing மாநில துணை செயலாளர் தமிழ்மறை, வட்ட கழக செயலாளர்கள் தம்பி (எ) சண்முகம், கேபிள் நித்யானந்தம், பகுதி கழகம் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாக முகவர்கள் (BLA2), கழக அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் இன்று ஜூன்.6 கணபதி ராஜ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.



