கோவை குறிச்சியை அடுத்த பொங்காளி அம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான பளைய பிளாஸ்டிக் பொருட்களை வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நானல் புற்குவியலும் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த நானல் புற்களில் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அருகில் வைக்கப்பட்டிருந்த பளைய பிளாஸ்டிக்குகள் மீதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சுழ்ந்தது.இதனால், அருகில் இருந்த குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு முச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் அப்பகுதியில் யாரேனும் திட்டமிட்டு தீயை வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.