அன்னூர், இட்டேரி ரோடில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி ஜூன் 7ம் தேதி தொடங்கியது. வடிகால்கள் அன்னூரில் இருந்து குன்னத்தூராம்பாளையம் வரையிலானது.
கோவை: அன்னூரில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி இன்று ஜூன்.7 நடைபெற்றது. அதன்படி அன்னூர் குளத்தில் இருந்து மழை நீரை குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு கொண்டு செல்வதற்காக அன்னூர் இட்டேரி ரோடு முதல் குன்னத்தூராம்பாளையம் வரை மழை நீர் வடிகால் அமைக்க அளவீடுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.