கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான இடத்தை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

கோவையில் நடக்க உள்ள திமுகவின் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான இடம் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது


கோவை: கோவையில் திமுக சார்பில் வருகிற 14-6-2024, அன்று, நடைபெற உள்ள, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40/40 மாபெரும் வெற்றியைப் பெற்றமைக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைந்து, திமுக சார்பில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழாவாக நடத்தப்படும் இடத்தை, இன்று 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.00 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், L&T பைபாஸ் சாலையில் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், ஆர்.மணிகண்டன், ஒருங்கிணைந்த கோவைமாவட்ட திமுகவிற்கு உட்பட்டகழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...