உடுமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. பரபரப்பான முடிவுகளுக்கு இடையே பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமராக 3-ம் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.
மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.

இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.
மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.
இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.