தி மு க, அ தி மு க தலைவர்களின் வீடுகளின் முன் விவசாயிகள் போராடினால் இந்து மக்கள் கட்சியும் பங்கேற்கும்- அர்ஜுன் சம்பத் பேட்டி


தில்லியில் போராடும் விவசாயிகள் தமிழகத்தில் தி மு க, அ தி மு க தலைவர்களின் வீடுகளின் முன்பாக நிர்வாணப் போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைதேர்தலை ரத்து செய்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பணம் கொடுத்த அ தி மு க-வின் இரு அணிகள், தி மு க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்த  வேண்டும்.

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக வரும் 12-ம் தேதியன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

மேலும், சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு அல்ல என திராவிட இயக்கங்கள் சொல்வது கண்டனத்திற்குறியது. தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் எனக் கோரி பனைமரத்துக்கு வழிபாடு நடத்திப்போராட்டம் நடத்த உள்ளோம்.

விவசாயிகள் தில்லியில் போராடுவது சரியானதல்ல. தில்லியில் விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டத்தை கலைஞர், ஜெயலலிதா வீட்டு முன் நடத்த வேண்டும். அந்த நிர்வாண போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியும் முழு ஆதரவு அளிப்பதோடு பாதுகாப்பும் வழங்கும்.

தமிழகத்தில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்தி எழுத்துக்களை திராவிடர் கழக அமைப்பினர் அழிப்பது தொடர்ந்தால் திராவிட கழகங்களின் கல்வெட்டுக்கள் மீது தார் பூசப்படும். 

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அப்போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும். பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவே அய்யாகண்ணு தில்லியில் போராட்டம் நடத்துகிறார். மோடியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுகின்றது" என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...