துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம்

பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் வந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.



இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் ஒன்றிணைந்து நலச்சங்கம் உருவாக்கி தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக தூய்மையாகவும், சுற்றிலும் பல வகையான செடிகளை நட்டும், ஆரோக்கியம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியுள்ளனர். கோயமுத்தூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு முதலிடம் பெறுவதற்காக தகுதியை பெற்றுள்ளது.

மேலும் ஒவ்வொரு வீடுகளில் துணி காயபோடுவதற்கு கூட கம்பிகள் கட்டப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பை தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் வி.கே.வி.கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மாடசாமி, துணை நிர்வாக பொறியாளர் சுதர்சன், சமுதாய வளர்ச்சி உதவியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நலச்சங்க துணைத்தலைவர் சந்தோஷ்குமார், ரஷ்யா, மாலினி, முனுசாமி, சபரிமனோ, காவேரி, இந்திராணி, நிர்மலா, சாந்தி, சமுத்திரவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...