சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருட்டு - காவல்துறை விசாரணை

அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ள வேணுகோபால் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் என்ற மர்ம யார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர், திருச்சி ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால்(60). இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று ஜூன்.9 அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கார்மெல் வேணுகோபாலுக்கு போன் செய்து சொன்னார். உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.பின்னர், இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

பின் அந்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...