சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
கோவை: கோவை நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஜூன்.10 நண்பகல் வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்தன. அப்போது சாலை நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.