ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கோவை: காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை வெளியிட்டதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனு மீதான விசாரணை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று ஜூன்.10 விசாரணைக்கு வந்தது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.நிக்கோலஸ் ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...