ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கோவை: காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை வெளியிட்டதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனு மீதான விசாரணை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று ஜூன்.10 விசாரணைக்கு வந்தது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.நிக்கோலஸ் ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...