அா்த்தநாரிபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அா்த்தநாரிபாளையத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (64), விவசாயி. இவா், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று ஜூன்.10 தீா்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.குலசேகரன் அளித்த தீா்ப்பில், பெருமாளுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும், மூன்றாவது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...