நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் அளிக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண். 3, நாள்: 21.05.2024 மற்றும் எண்.5 நாள்: 31.05.2024 ஆகியவற்றின்படி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

83 நீர் நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண் 1 வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்நேர்வில், விவசாயிகளின் நலன் கருதி மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதெரிவித்துள்ளார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...