கோவையில் 5வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் இலவச சேர்க்கை – ஆட்சியர் அறிவிப்பு

பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 12, உயர்நிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளிகள் 2 என மொத்தம் 15 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 11, நடுநிலைப் பள்ளிகள் 2, உயர்நிலைப் பள்ளி 2, மேல்நிலைப் பள்ளிகள் 1 என மொத்தம் 16 பள்ளிகளும் உள்ளன.

தற்போது இப்பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்று கல்வி உதவித்தொகை, இலவசநோட்டு புத்தகம், புத்தகப்பை, மிதிவண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...