கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை – கூட்டு முயற்சியை காரணம் என அதிகாரிகள் பெருமிதம்

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் 5 டன் சரக்குகள் ஏற்றி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்,


கோவை: கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். இந்நிலையில் சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணிகளின் இருக்கைகள் குறைவாக புக்கிங் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது.

உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்குகளை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப்பொருட்கள் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும். பொருட்கள் ஏற்றுமதிக்காக வால்வு ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்நிலையில் 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன. கூட்டு முயற்சியால் சாதனை படைத்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் முதல் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 950 டன் முதல் 980 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், ஜவுளிப்பொருட்கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்தை சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...