கோவை வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகள் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதொடங்கி வைக்கும் விதமாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அண்மையில் ஜூன்.12 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் 1,27,420 குறியீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்தவெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



அவற்றில் உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு 5382 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார நர்சரி மற்றும் 12 கூடுதல் நர்சரிகளில் 1,75,560 நாற்றங்கால் உற்பத்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகளும், காரமடை வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள 34 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22000 மரக்கன்றுகளும், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள 39 ஊஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22,204 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20,150 மரக்கன்றுகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள 7 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 5426 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 15,500 மரக்கன்றுகளும், சூலூர் வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 7,750 மரக்கன்றுகளும் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...