வெளிநாடுகளுக்கு கோவையில் இருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.இந்த அலுவகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) வேண்டும் என்று 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மொத்தம் 1.77 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக இம்மையத்தின் பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் இன்று ஜூன்.13 தெரிவித்துள்ளார்.

2008ல் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இத்தனை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.2023ல் சமர்ப்பிக்கப்பட்ட 30% விண்ணப்பங்கள் குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக வந்துள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...