வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து ஐந்து வருடமாக பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.