மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று ஜூன்.13 மதியம் திடீரென கருமேகங்கள் திரண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் கடந்த இரு நாட்களாக இருந்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று ஜூன்.13 மதியம் திடீரென கருமேகங்கள் திரண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் கடந்த இரு நாட்களாக இருந்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.