பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டன. அதனை வாங்குவதற்காக கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களைக்கட்டி இருந்தது.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்களில் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமைகளில் ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைக்கட்டி இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது.

இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. ஆண்டுதோறும் அதிகளவில் மாடுகள் விற்பனை நடைபெறும் சந்தையாக பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...