தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது

கோவை கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற எம்.டி.ஏ மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை எம்.டி.ஏ. மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், கோவை கிராண்ட் ஹோட்டலில் இன்று ஜூன்.13 நடைபெற்ற 9-வது பொதுக்குழுவில் சமூக சேவைக்கான விருதுகள் தமுமுகவின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

எம்.டி.ஏ. அசோசியேசன் தலைவர் பிரோஸ் காண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோவை மத்திய மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ பணிகள், ரத்ததான முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவிகள், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு தமுமுகவை கவுரவப்படுத்தி இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கோவை சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம் அவர்கள், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஷகீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஆசிக் அகமது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சபீர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர் கே ஜி ராமமூர்த்தி, மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...