இன்று (12-04-2017) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் கரும்புக்கடை பூங்காநகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பகுதியில் இருக்கும் ஸ்க்ராப் குடோன் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அருகில் இருக்கும் அடுத்தடுத்த குடோன்களுக்கும் தீ பரவியது.

அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கும், காவல்துறைக்கும் மற்றும் மின்சாரதுறைக்கும் தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவெகுநேரம் போராடி சுமார் ஆறு மணியளவில் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.