திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று மாலையில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா இன்று மாலை கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உட்பட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமைச்சர்கள், அதற்கு பின் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமரும் வகையிலும், தொண்டர்களுக்காக 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும், நூற்றி ஒன்றாவது ஆண்டு துவக்க விழாவையும் நினைவு கூறும் வகையில் மேடையில் நிறுவுவதற்காக சுமார் 8 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதியின் இரண்டு திரு உருவ சிலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஏராளமானோர் இந்த விழாவிற்கு வருவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகின்ற நிலையில், அவிநாசி நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்றம் செய்திருக்கின்றனர். புறவழிச்சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் l&t பைபாஸ் வழியாக திருச்சி சாலையில் இணைந்து சிங்காநல்லூர் ராமநாதபுரம் உக்கடம் பகுதிக்கு வரலாம். அதேபோன்று சக்தி சாலை வழியாகவும் புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

அவிநாசி சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். மற்றும் பயனியர் மில்ஸ் வழியாக சேரன்மாநகர், காளப்பட்டி, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் மாநகரத்தில் வர அனுமதி தரவில்லை.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...