கோவை கொடிசியாவில் இன்று முப்பெரும் விழா - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார்.


கோவை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, கலைஞர் நூற்றாண்டு விழா என மூன்று நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று ஜூன்.15 கோவையில் கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் தமிழக எம்.பி க்கள் 40 பேர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களான வைகோ, முத்தரசன், உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து வருகிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகை புரிய உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இப்பகுதி மட்டுமல்லாது கொடிசியா சுற்றுப்புற பகுதிகள், விமான நிலையம் என சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...