உடுமலையில் விவசாயிடம் நிலம் வாங்கி ரூ.4 கோடி மோசடி செய்த நபர் தலைமறைவு - காவல்துறை தேடல்

ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 41 ஏக்கர் நிலத்தை ரூ. 4 கோடிக்கு வாங்கி விட்டு, பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்து வந்த விஜயகுமார் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மானுபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் 41 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ராதாகிருஷ்ணனின் 41 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.

பணத்தை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் பரிவர்த்தனை செய்யாமல் ஏமாற்றி உள்ளார். அதன் பிறகு தொடர்ந்து கேட்ட பிறகு 37 லட்சத்து 25 ஆயிரம் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசீல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...