தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை தேர்வு செய்ய திட்டம்

கோவையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.



கோவை: தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி இல்ல காதணி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.



விழாவில் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இலவச நடமாடும் உணவு வாகனத்தை தமிழக வெற்றிக்கழக தேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், கோவை தெற்கு மாவட்டத்திலேயே இரண்டு வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அவர் எந்த இடத்தை தேர்வு செய்வாரோ அதுகுறித்து அறிவிக்கப்படும் என கூறினார். முன்னதாக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், தெரிவித்தார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு எங்கள் தலைவருடன் கலந்த ஆலோசித்து அதற்குண்டான விவரங்களை தெளிவாக கூறுவோம் என பதிலளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...