தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இரத்த கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவையில் விவசாயிகள்


தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இவர்களுக்கு ஆதரவாக கோவை சிவானந்தா காலணி பகுதியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது இரத்தத்தில் கைரேகையிடும் நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒரு மாதமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் செய்ய வேண்டுமெனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...