கோவையில் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 4,386 பேர் பங்கேற்றனர். 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்றது.


Coimbatore: ஜூன் 16 அன்று கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்றனர். மொத்தம் 7,332 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த போதிலும், 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்திய குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. தேர்வாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு வந்த தேர்வாளர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மாநில நுண் பார்வையாளர் ஆர்.செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...