கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கண்ணதாசன் கழகம் சார்பில் கவிஞா் பழநிபாரதிக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டதுடன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.
Coimbatore: கோவை பாப்பநாயக்கன்பாளையம் கண்ணதாசன் கழகம் சார்பில், ஆண்டுதோறும் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் 'கண்ணதாசன் விருது' இந்த ஆண்டு கவிஞா் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது. கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கு கட்டட கலை வல்லுநர் ரமணி சங்கர் தலைமையேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம.கிருஷ்ணன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கவிஞா் பழநிபாரதிக்கு பாராட்டு பட்டயம் வழங்கினார்.
அதே நிகழ்ச்சியில், கவிஞா் அ.வெண்ணிலாவுக்கும் கண்ணதாசன் விருது மற்றும் பாராட்டுப் பத்திரம் பெற்றார். நிகழ்ச்சியில் 'கண்ணதாசன் பார்த்த அரசியல்' மற்றும் 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் உரையரங்கங்கள் நடைபெற்றன. முனைவர் நா.சியாமளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அதே நிகழ்ச்சியில், கவிஞா் அ.வெண்ணிலாவுக்கும் கண்ணதாசன் விருது மற்றும் பாராட்டுப் பத்திரம் பெற்றார். நிகழ்ச்சியில் 'கண்ணதாசன் பார்த்த அரசியல்' மற்றும் 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் உரையரங்கங்கள் நடைபெற்றன. முனைவர் நா.சியாமளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.