கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது.

கோவில் விழாவின் ஒருபகுதியாக இன்று மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புலியகுளம் பகுதி மக்கள் மட்டுமின்றி கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று பூவோடு எடுத்து வீதிவுலா வந்தனர்.

மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள் புலியகுளத்தில் இருந்து ஒலம்பஸ், ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தையே அடைந்தனர்.

மேலும், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடலில் அழகு குத்தியும், வாயில் மிகப் பெரிய அளவிலான அழகு குத்தியும் வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர்.

கோவிலில் குவிந்துவரும் பக்தர்களுக்கென பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆங்காங்கே மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர்.
இம்மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டு வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பலர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது.

கோவில் விழாவின் ஒருபகுதியாக இன்று மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புலியகுளம் பகுதி மக்கள் மட்டுமின்றி கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று பூவோடு எடுத்து வீதிவுலா வந்தனர்.

மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள் புலியகுளத்தில் இருந்து ஒலம்பஸ், ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தையே அடைந்தனர்.

மேலும், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடலில் அழகு குத்தியும், வாயில் மிகப் பெரிய அளவிலான அழகு குத்தியும் வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர்.

கோவிலில் குவிந்துவரும் பக்தர்களுக்கென பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆங்காங்கே மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர்.
இம்மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டு வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பலர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.