கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் குவியும் பக்தர்கள்

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும்  வெகுவிமர்சையாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.



அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது.



கோவில் விழாவின் ஒருபகுதியாக இன்று மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புலியகுளம் பகுதி மக்கள் மட்டுமின்றி கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று பூவோடு எடுத்து வீதிவுலா வந்தனர்.



மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள் புலியகுளத்தில் இருந்து ஒலம்பஸ், ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தையே அடைந்தனர்.



மேலும், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடலில் அழகு குத்தியும், வாயில் மிகப் பெரிய அளவிலான அழகு குத்தியும் வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர்.



கோவிலில் குவிந்துவரும் பக்தர்களுக்கென பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆங்காங்கே மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர்.

இம்மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டு வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பலர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...