பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பக்ரீத் பண்டிகை நாளான இன்று ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து வனப் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தன் பாறை போன்ற பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த காரணத்தால் அருவிப்பகுதியில் குறைந்த அளவு சீரான முறையில் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கபட்டது.



இந்த நிலையில் இன்று பக்ரீத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...