கோவையில் மருதமலை அருகே நடந்து சென்ற முதியவரை விரட்டி தாக்கிய காட்டு யானை - வீடியோ வைரல்

கோவை மருதமலை, ரெப்ரீஸ் காலனி நாச்சியார் மடம் அருகே கடந்த 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் நடந்து சென்ற முதியவரை ஒற்றை காட்டு யானை விரட்டி தாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானை மனித மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே கோவை மருதமலை, ரெப்ரீஸ் காலனி நாச்சியார் மடம் அருகே கடந்த 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த காட்டு யானை, சிவசுப்பிரமணியத்தை விரட்டி தாக்கியது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது ஜூன்.17 வெளியாகி மருதமலை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...